இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதி குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், பத்தாம் தேதிக்கு மேல் வாங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
போளூரில் அனுமன் ஜெயந்தி விழா!
போளூரில் அனுமன் ஜெயந்தியையொட்டி முன்னிட்டு ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 45 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு கிரேன் மூலம் வடமலை,சாத்துக்கொடி மாலை, துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயருக்கு அணிவித்த வடமாலையும், சாத்துக்கொடி மாலையும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றி அகல் விளக்கு தீபங்களை ஏற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டார்கள்