திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, நேற்று (17.03.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

