இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது.
கலசபாக்கம் வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரானா தொற்று!
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் நேற்று தெரியவந்தது. அதில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டிக்க திட்டம்!
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் https://tnmedicalselection.net https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று மாலை வெளியீடு.
திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் !
திருவண்ணாமலை நகரில் மத்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை (23.01.2022 ) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை – மத்திய அரசு!
ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6-11 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாக மாஸ்க் அணியலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த முடிவு – அமைச்சர் பொன்முடி!
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 01-ம் தேதி தொடங்கும் எனவும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது எனவும் தகவல்.
அமேசான் நிறுவனத்தின் கல்வி உதவி தொகை!
அமேசான் நிறுவனம், முதலாம் ஆண்டு CSE/IT படிக்கும் இந்திய குடிமகன்களுக்கு ₹1,60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை. விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி https://ffe.org/amazon-future-engineer/
மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு!
டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது. இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 17ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே, எளிமையாக தீர்த்தவாரி நடைபெற்றது!
2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க 3-ம் பிரகாரத்தில் இருந்து 5-ம் பிரகாரத்திற்கு சாமி எழுந்தருளினார். தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், அன்னதான கூடம் அருகில் வைத்து சாமியின் சூலரூபமான அஸ்திரதேவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது. தொடர்ந்து […]
பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை!
கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. […]
இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்!
2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் இனி.. வீட்டிலிருந்தே பத்திரம் பதிவு செய்யலாம்!
பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக சோதனை முறையில் தமிழகத்தில் 5 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்து மற்ற அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று […]
திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் – திருவூடல் உற்சவம் 2022!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார், அருள்மிகு ஶ்ரீ பராசக்தி, ஶ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார், திருமாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்தார். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை!
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு. 10 மற்றும் 12ம் வகுப்புக்கு வரும் 19ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் – திருவூடல் மகா உற்சவம்!
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில் திருவண்ணாமலை திருவூடல் மகா உற்சவம்! வைபவம் அண்ணாமலையார் அலங்காரம் (15.01.2022) [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் விழா முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (15.01.2022) மாட்டுப்பொங்கல் திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை. அனைத்து நந்திகளுக்கும் அருள்மிகு (பெரிய நாயகர்) அண்ணாமலையார் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது?
தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம். பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன? தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் (14.01.2022 – தை 01 – வெள்ளிக்கிழமை): மதியம் 12.00 – 01.30 வரை மாலை 04.30 – 06.00 வரை மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம் (15.01.2022 – தை 02 – சனிக்கிழமை) : காலை […]