போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி – அட்டவணை!

போளூர் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்காணும் அட்டவணைப்படி ஜமாபந்தி (நில வரி சரிபார்ப்பு மற்றும் உரிமை சரிபார்ப்பு நிகழ்வு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

• போளூர் உள் வட்டம் (முதலாம் நாள்)  – 16.05.2025 (வெள்ளிக்கிழமை)
• கேளூர் உள் வட்டம்(இரண்டாம் நாள்) – 20.05.2025 (செவ்வாய்க்கிழமை)
• சந்தவாசல் உள் வட்டம்(மூன்றாம் நாள்) – 21.05.2025 (புதன்கிழமை)
• மொடையூர் உள் வட்டம்(நான்காம் நாள்) – 22.05.2025 (வியாழக்கிழமை)
• மண்ட கொளத்தூர் உள் வட்டம்(ஐந்தாம் நாள்) – 23.05.2025 (வெள்ளிக்கிழமை)

இந்த ஜமாபந்தி நிகழ்வுகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலக வளாகம், போளூர் இடத்தில் நடைபெற உள்ளன.

பொது மக்கள், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா, சிட்டா, வரி விவரங்கள் மற்றும் உரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளவும், தேவையான திருத்தங்களை செய்யவும் இந்த ஜமாபந்தி நாட்களில் பங்கேற்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.