திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் வரும் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இது அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும்.

கார்த்திகை தீபம், திருவண்ணாமலை திருக்கோயிலின் பிரம்மாண்டமான திருவிழாவாகும். இந்த விழாவின் தொடக்கநாள் முகூர்த்தம் (பந்தக்கால் நாட்டு நிகழ்வு) வரும் திங்கட்கிழமை (23.09.2024) காலை 5:45 மணிமுதல் 7:00 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வின் போது கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் ஆரவாரத்தால் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட உள்ளது. இந்த விழா, ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. பக்தர்கள் இந்த பண்டிகையில் பெரும் திரளாகக் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரரின் அருளைப் பெறுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கார்த்திகை தீப பண்டிகையின் முதல் நிகழ்வாக நடைபெறும் பந்தக்கால் முகூர்த்தம், நடைபெறவிருக்கும் தீப திருவிழாவிற்கான திருவிழா தொடக்கமாக கருதப்படுகிறது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.