திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், பேட்டை சோமந்தபுத்தூர் கிராமம், குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில் புனோரோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா சுபகிருது வருடம் வைகாசி மாதம் 18 – ஆம் தேதி (01-06-2022) புதன்கிழமை சித்தயோகம் கூடிய சுப தினம் காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை புரிந்து அருள்மிகு திரௌபதி அம்மன் திருவருளைப் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!
பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி நாள். அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN Credit card பெற வேண்டும். இந்த KISAN Credit card யை பெற இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் 4% வட்டி வீதத்தில் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி நாள்.
இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது!
இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Digital locker என்பது Driving License, Adhaar card, Mark Sheets போன்ற தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை (Certificates) டிஜிட்டல் வடிவில் சேமிக்கலாம். இவ்வாறு சேமிக்கப்படும் ஆவணங்கள் JPEG, PNG மற்றும் PDF ஆகிய வடிவில் பதிவாகும். Digital Locker சேவையை Mobile Application வழியாகவும் பெற முடியும். இதற்காக Play Store -ல் Digital Locker என்று Search செய்து அந்த App – ஐ Install செய்துகொள்ளலாம்.
ஜூம் மீட்டிங் (Zoom Meeting) செயலி பற்றிய தகவல்கள்!
ஜூம் மீட்டிங் (Zoom Meeting) மூலம் அலுவலக மீட்டிங், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங், online class மூலம் அனைத்து வகையான முறையான தகவல் தொடர்புகளும் ஜூம் வழியாகச் செய்யலாம். இந்த App ஐ Laptop, Browser அல்லது Smart Phone வழியாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். https://zoom.us/join என்ற இணையதளத்தின் மூலமாகவும் பயன்படுத்தலாம்.
Gold Rate Decreased Today Morning (31.05.2022)!
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Tuesday Morning (May 31, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38200.00 and a gram is Rs. 4775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5174.00. A kilo of silver is priced at Rs. 67500.00 and a gram is worth Rs. 67.50.
அண்ணாமலையார் திருக்கோயிலில் வைகாசிமாத அமாவாசை முன்னிட்டு பெரிய நாயகருக்கு மகா ருத்ராபிஷேகம்!
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (30.05.2022) வைகாசிமாத அமாவாசை முன்னிட்டு பெரிய நாயகருக்கு மகா ருத்ராபிஷேகம் நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
கலசபாக்கம் பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ஜெ.சிவா, நலன் சக்கரவர்த்தி, கவுன்சிலர் கண்ணன் ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில் கலசபாக்கம் வட்டத்தில் வீரளூர், கடலாடி, மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் கிராமங்களில் 10 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. கடலாடி கிராமத்தில் சாலையருகே உள்ள ஏரியில் பலகைக்கல்லில் 13 வரிகளில் இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால் அவர்கள், இக்கல்வெட்டு கன்னரதேவனின் இருபதாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது என்றும் தற்போதைய செஞ்சி பகுதியான குறிக்கும் சிங்கபுர நாட்டு மீவழியில் (பெருவழி) தாயனூர் என்ற ஊரைச்சேர்ந்த சிற்றையன் மன்றையன் என்பவர் பல்குன்றக் கோட்டத்தில் காந்தளுர் கூற்றத்து புதனாட்பாடி நாட்டு கடலாடி என்ற ஊரில் உள்ள ஏரியைப் பராமரிப்பதற்காக ஏரிப்பட்டியாக நிலம் தானம் அளித்ததை குறிப்பிடுகிறது. ஏரிப்பட்டி என்பது ஏரி போன்ற நீர்நிலைகளை பராமரிக்க அளிக்கும் மானியம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கலசபாக்கம் அடுத்த வீரளுரில் இருந்த பாழடைந்த கோயில் அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று 24 அடி நஞ்சை நிலத்தின் அளவைக்குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேல்சொழங்குப்பம் கிராமத்தில் உள்ள கோயிலில் மண்டபத்தைக் உள்ள 17 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி உள்ள தூண் கல்வெட்டில் தொண்டவ செட்டியின் மகன் பெத்த செட்டி என்பவர் மண்டபம் கட்டி தொடர்ந்து சேவை செய்து வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதமங்கலம் அடுத்த தாதாபாளையத்தில் மணிமோசிஅய்யர் என்பவரின் தர்மச்செயல்களை பற்றி பலகைக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கிடைத்த இக்கல்வெட்டுகள் மூலம் அப்பகுதியில் நிலவிய அரசியல், அறப்பணிகள் பற்றிய புதிய செய்திகள் தெரியவந்துள்ளன என்றும் அரசு இவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!
கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் யுபிஎஸ்சி http://www.upsc.gov.in/ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு. தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!
வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்தால் அனுப்பி வைக்கப்படும் என ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது. பாட நூல்களைப் பெற விரும்புபவர்கள் TNPSC GROUP-IV TEXT BOOKS என்று டைப் செய்து, தங்கள் முழு முகவரியுடன் 9176392791என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பிய முன்பதிவு செய்யவும்.முன்பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!
ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 2022-2023ஆம் கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதில் புதிய திட்டமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் வழங்கப்படும், அதனால் பள்ளி வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் காலையில் 8.30மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு பிரதாப் IAS அவர்கள் இடமாற்றம்!
திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு. பிரதாப் IAS அவர்கள் கோயம்புத்தூர் மாநாகராட்சி ஆணையாளராக இடமாற்றம்.
Gold Rate Increased Today Morning (30.05.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Monday Morning (May 30, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38280.00 and a gram was Rs. 4785.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5184.00. A kilo of silver was priced at Rs. 67000.00 and a gram was worth Rs. 67.00.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நிவர்த்தி அபிஷேகம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது.இதனைத் தொடர்ந்து நேற்று(28.05.2022) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நிவர்த்தி அபிஷேகம் நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிமீ நீண்ட வரிசையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். வைகுண்டம் வளாகத்தில் உள்ள 33 குடோன்களில் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, வரிசையில் அனுப்பப்பட்டாலும், 3 கி.மீ.க்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.04:42 PM
சாரல்ஸ் பெண்கள் அழகு நிலையம் – Saarals Beauty Parlour
எங்கள் அழகு நிலையத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கு சிறந்த முறையில் மேக்கப் செய்யப்படும்.அனைத்து விதமான ஹேர்கட்ஸ், ஹேர்ஸ்பா, ஃபேஸ் ப்ளீச், பேசியல், ஹேர்கலர் , வேக்சிங் செய்யப்படும்.நாங்கள் உபயோகிக்கும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தவை தரமானவை. எந்த வித பின்விளைவுகளும் இல்லை. (வேலைக்கு பியூட்டிசியன் வேலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் ஆட்கள் தேவை) கவரிங் நகைகள் வாடகைக்கு கிடைக்கும் தொடர்புக்கு :271/A, Everest GVK Complex,Housing Board (Opp),CC Road, Polur,Tiruvannamalai – 606803 Name : ThangarajContact : 7373917155, 9790391578Place : polur
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம்.
அரசுப் பேருந்துகளில் குழந்தைகளுக்கான பேருந்து கட்டணம் இல்லை!
அரசு பேருந்துகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை செயல்படுத்த அனைத்து மேலாளர்களும், முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 111 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 111 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம். • மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளோமா.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி நியமனம்!
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தின. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 16 முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞர்களைத் தேர்வு செய்தனர். முகாமில் பல்வேறு கல்வி தகுதி கொண்ட 148 பேர் கலந்து கொண்டனர். இதில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் த. மோகன்ராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.