திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (27.05.2022) வைகாசி மாத அமாவாசை பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரமான கத்திரி வெயில் காலம் நாளையுடன் நிறைவு!
அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் வெயில் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக திரு. முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்!
திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த பார்த்தசாரதி ராஜபாளையம் நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி கமிஷனராக பணியாற்றி வந்த முருகேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக திரு. முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகரமன்ற பிரதிநிதிகள் வரவேற்றனர்.
அக்னி நட்சத்திரம் தோஷம் போக்கும் மகா அபிஷேகம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திர காலம் என்றழைக்கப்படும். அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு பெற உள்ள நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 1008 கலசாபிஷேக யாகம் நேற்று (26.05.2022) மாலை முதல் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்றும், அக்னி நட்சத்திரம் முடிவு நாளான நாளையும் காலையில் யாகம் நடத்தப்பட்டு கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாச்சலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதி உலா நடைபெறும். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!
குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு : 312 காலிப்பணியிடங்கள்!
இந்தியன் வங்கியில் மேலாளர், சீனியர் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14-06-2022 விண்ணப்பக் கட்டணம்: பொது: ரூ.850/- + GST SC/ST/ PWD : ரூ.175/- + GST
Gold Rate Increased Today Morning (27.05.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Friday Morning (May 27, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38200.00 and a gram was Rs. 4775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5174.00. A kilo of silver was priced at Rs. 66600.00 and a gram was worth Rs. 66.60.
திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை!
திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை. இனி திருமணச் சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. https://tnreginet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் திருமணச் சான்றிதழை பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.
Gold Rate Decreased Today Morning (26.05.2022)!
The cost of gold has decreased by Rs. 320 per sovereign on Thursday Morning (May 26, 2022). The cost of the gold rate has decreased by Rs. 40 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38120.00 and a gram is Rs. 4765.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5164.00. A kilo of silver is priced at Rs. 66000.00 and a gram is worth Rs. 66.00.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்றும் (25-05-2022), நாளையும் (26-05-2022) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் 1 அல்லது 2 இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே (25.05.2022) கடைசி நாள். https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!
• 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு. • 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. • 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
போளூர் பகுதியில் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா!
போளூர் பகுதியில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு நேற்று (24.05.2022) ஸ்ரீ தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Gold Rate Increased Today Morning (25.05.2022)!
The cost of gold has increased to Rs. 16 per sovereign on Wednesday Morning (May 25, 2022). The cost of the gold rate has increased to Rs. 2 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38696.00 and a gram was Rs. 4837.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5236.00. A kilo of silver was priced at Rs. 66500.00 and a gram was worth Rs. 66.50.
தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று (25.05.2022) முதல் https://www.tn.gov.in/tncmfp/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் அலுவலகம், அரசின் திட்டங்களில் செயல்படும் பணி வழங்கப்படும்.
மத்திய அரசின் இலவச தையல் பயிற்சி பற்றிய அறிவிப்பு!
மத்திய அரசு இலவச தையல் பயிற்சிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. https://eskillindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் உங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
Gold Rate Decreased Today Morning (24.05.2022)!
The cost of gold has decreased by Rs. 112 per sovereign on Tuesday Morning (May 24, 2022). The cost of the gold rate has decreased by Rs. 14 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38584.00 and a gram is Rs. 4823.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5222.00. A kilo of silver is priced at Rs. 65800.00 and a gram is worth Rs. 65.80.
மொடையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மொடையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நிகழும் வைகாசி மாதம் 27-ம் தேதி (10.08.2022) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஜீர்ணோத்தாரன நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
பிறப்பு பதிவேட்டில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு!
பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு பதிவேடுகளில் குழந்தைகளின் பெயர் விடுபட்டிருந்தால் தற்போது பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000ன் படி குழந்தையின் பெயர் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு..!
வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வேண்டுகோள். ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்; மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்!