ஆதார் மற்றும் பான் எண் இணைப்பானது வருமான வரித் துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை ரூ. 500 அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஜூன் 30 க்கு பின் அபராதம் ரூ. 1000 ஆக அதிகரிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணையதளத்தின் மூலம் ஆதார்-பான் எண்களை இணைத்துக்கொள்ளலாம்.
IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India -IDBI) எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதளத்தின் மூலம் இன்று (03.06.2022) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17-06-2022 கல்வித்தகுதி: டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு சம்பளம்: ரூ.36,000 விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு: ரூ.1000/- SC/ST/PWD : ரூ.200/-
JB Soft System celebrates its 21st Anniversary!
Valued patrons, respected clients, and eager browsers! Greetings to you all! We, Poluronline.com, are delighted to announce the 21st Anniversary of our ever-popular and consistently growing concern! One more year, one more feather to our crown, JB Soft System celebrated its 21st anniversary on 3rd June 2022 , thus stepping into its 22nd year of operations. Its a proud moment for the company as it grows steadily everyday in terms of business, customers, knowledge and team. JB Soft system has evolved to create its vision & mission which stands as below: Vision To be the most preferred web services company. Mission To reach maximum number of businesses possible and elevate them with quality IT solutions with an empowered and wide spread network of strong team. Creating delighted clients and happy employees. We are thankful to our customers, employees, stakeholders, vendors, well wishers and their families on crossing this milestone and marching ahead into a vibrant future. We reiterate our responsibility to provide the best service and support to the growth of our customers. We look forward to an exciting journey ahead by delivering our advanced technology services and consultation to our customers. Cheers! OUR CEO MESSAGE : Happy Morning… On 03 Jun 2001 JB Soft System happened in my life. I thank JB Soft System with My heart filled gratitude and prayers for all the happenings in these 21 years… I thank JB Soft System for bringing wonderful people like you in my life… Cherishing every moments with you, with JB Soft System with Gratitude ! J Sampath Founder, JB Soft System www.jbsoft.in
Gold Rate Increased Today Morning (03.06.2022)!
The cost of gold has increased to Rs. 400 per sovereign on Friday Morning (June 03, 2022). The cost of the gold rate has increased to Rs. 50 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38480.00 and a gram was Rs. 4810.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5209.00. A kilo of silver was priced at Rs. 68500.00 and a gram was worth Rs. 68.50.
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் ஜமாபந்தி!
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 03.06. 2022 முதல் 13.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது . பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம். ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது கிராம நிர்வாக அலுவலர் ஆவார். வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தாங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். மேலும், • தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். • கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி • சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா • வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட கடன் மற்றும் மானியம் • கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவடைந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்துச் செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
வணிகவரித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64.21 கோடி வரிவசூல்!
வணிகவரித் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64 கோடி வரி வசூல் செலுத்தி இருப்பதாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகவரித் துறையால் சுமார் 3.26 லட்சம் வணிகர்கள் கடந்த நிதியாண்டு (2021-2022)ல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதேபோல், சுமார் 94 லட்சம் வணிகர்கள், ரூ.1000க்கும் கீழ் மட்டுமே சரக்கு மற்றும் சேவைகள் வரியினை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியது கண்டறியப்பட்டது. வணிகவரி கணக்கை சரிபார்த்து உரிய வரிகளை செலுத்திடுமாறு அவ்வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அதன் விளைவாக மே 2022ல் 22430 வணிகர்கள் ரூ.64.21 கோடி வரித்தொகையினை அரசிற்கு செலுத்தியுள்ளனர். 22,430 வணிகர்கள் கிட்டதட்ட ரூ.64 கோடி அரசிற்கு செலுத்தியுள்ள நிகழ்வு இதுவரை வரி செலுத்தாமல் உள்ள வணிகர்களையும் வரி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய வணிகர்கள் அனைவரும் உடனடியாக தங்களது கணக்கை சரிபார்த்து அரசிற்கு செலுத்த வேண்டிய வரித்தொகை ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக செலுத்தி அபராதம் மற்றும் வட்டியினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வரி ஏய்ப்பு ஏதேனும் வணிக வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகையுடன் சேர்த்து அபராதம் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Gold Rate Increased Today Morning (02.06.2022)!
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Thursday Morning (June 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 20 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38080.00 and a gram was Rs. 4760.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5159.00. A kilo of silver was priced at Rs. 67000.00 and a gram was worth Rs. 67.00.
வாரந்தோறும் பரிசு மழை : Silver coin பரிசாக பெற்றவர்கள் விவரம்!
POLURONLINE.COM இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற நமது Poluronline.com பார்வையாளர்கள்.. 1. திரு. அரவிந்த் குமார் – போளூர் 2. திரு. கோபிநாத் – போளூர் 3. திரு. பிரபு – மாம்பட்டு வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது POLURONLINE.COM வாட்ஸ்அப் குழுவில் இணையலாம். https://chat.whatsapp.com/FTjxcB8mJ6hImN7d4Ek5aC [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரீமியத்தொகை இன்று (01.06.2022) முதல் உயர்வு!
கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக செலுத்தப்படும் பிரீமியமும் உயரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையமும், மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகமும், கலந்து ஆலோசித்து இந்த பிரிமியக் கட்டண உயர்வு முடிவை எடுத்துள்ளன. அதன்படி, • 150சிசிக்கு மேல் உள்ள 2 சக்கர வாகனங்கள்-15% உயர்வு • 1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்கள்-6% உயர்வு • 1000சிசி புதிய தனியார் கார்- 23% கூடுதல் • 1000-1500 சிசி வரையிலான புதிய தனியார் கார் ஒராண்டு 11% கூடுதல் • 1500சிசிக்கு கீழ் உள்ள காருக்கு பிரீமியம் குறைவு • கல்வி நிறுவன வாகனங்களுக்கு 15% தள்ளுபடி • புதிய இரு சக்கர வாகனங்களுக்கு 17% உயர்வு • 75 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு பிரீமியம் 175% உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Masked Aadhar பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள்!
Masked Aadhaar என்பது பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்-ஆதாரில் ஆதார் அட்டையின் எண்ணை மறைக்கும் ஒரு வசதியாகும். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் “xxxx-xxxx” போன்ற சில எழுத்துக்களாக மாற்றப்படும். உங்களது ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். masked ஆதாரை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதியைப் பெறுவதற்கு ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும். 1. https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டு, ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும். 2. Aadhaar/VID/Enrolment ID என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Masked Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும். 3. தேவையான விவரங்களை உள்ளிட்டு ‘Request OTP’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். 4. ஓடிபி எண்ணைப் பதிவிட்டு ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும். உடனே உங்களது Masked Aadhaar டவுண்லோடு ஆகிவிடும். 5. பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த Masked Aadhaar கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும். இதற்கான கடவுச்சொல் – பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள், பின்னர் பிறந்த வருடம்.
மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கண்ணமங்கலம்!
மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை: • தங்களிடம் உள்ள பொருட்களை பண்டமாற்று முறையின் முன்னெடுப்பாய் ஓர் சந்தை. • மானாவரி பயிர்கள் பற்றிய விளக்கம் அளிக்கிறார் திரு. ராசேந்திரன். • வளரி கலை பற்றிய விளக்கம் அளிக்கிறார் திரு. இளமாறன், திரு. முகிலன். நாள் : • 04.06.2022, சனிக்கிழமை. நேரம் : • 10.30 மணி முதல் 12 மணி வரை இடம் : • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். தொடர்புக்கு: • 9444333092, 9884845145, 9474324348 [siteorigin_widget class=”SiteOrigin_Widget_Image_Widget”][/siteorigin_widget]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் தற்போது கூட்டம் கணிசமாக குறைந்துள்ளதால் பக்தர்கள் சிரமம் இன்றி மகிழ்ச்சியாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 9 – ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது. அதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தையல் பயிற்சி, அழகுக்கலை, பேஷன் டெக்னாலஜி, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, ‘நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gold Rate Decreased Today Morning (01.06.2022)!
The cost of gold has decreased by Rs. 280 per sovereign on Wednesday Morning (June 01, 2022). The cost of the gold rate has decreased by Rs. 35 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 37920.00 and a gram is Rs. 4740.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5139.00. A kilo of silver is priced at Rs. 67000.00 and a gram is worth Rs. 67.00.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!
10, 12 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்! 11 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
போளூர் வசூர் முதல் குருவிமலை வரை சாலை விரிவாக்கம் பணி!
கம்பங்கள் சாலையின் ஓரம் நகர்த்த வேண்டியிருப்பதால் , வசூர்,குருவிமலை,புத்திராம்பட்டு,காங்கியனூர், ஆனைவாடி, கரையாம்பாடி,பத்தியவாடி, காலூர், சாலையனூர், அணியாலை இன்று (01.06.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் .
அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், பேட்டை சோமந்தபுத்தூர் கிராமம், குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில் புனோரோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா சுபகிருது வருடம் வைகாசி மாதம் 18 – ஆம் தேதி (01-06-2022) புதன்கிழமை சித்தயோகம் கூடிய சுப தினம் காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை புரிந்து அருள்மிகு திரௌபதி அம்மன் திருவருளைப் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!
பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி நாள். அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN Credit card பெற வேண்டும். இந்த KISAN Credit card யை பெற இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் 4% வட்டி வீதத்தில் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி நாள்.