The cost of gold has decreased by Rs. 384 per sovereign on Monday Morning (May 02, 2022). The cost of the gold rate has decreased by Rs. 48 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38840.00 and a gram is Rs. 4855.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5254.00. A kilo of silver is priced at Rs. 67600.00 and a gram is worth Rs. 67.60.
மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்!
மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் . சென்ற ஆண்டின் வரவு செலவு அறிக்கை மற்றும் அரசின் திட்டங்கள் பயனாளிகள் சேர்க்கை பற்றி விவாதித்து தீர்மானம் இயற்ற வேண்டும். வரவு செலவு அறிக்கையை ப்ளக்ஸ் போர்டில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
Gold Rate Increased Today Morning (30.04.2022)!
The cost of gold has increased to Rs. 48 per sovereign on Saturday Morning (April 30, 2022). The cost of the gold rate has increased to Rs. 6 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 39224.00 and a gram was Rs. 4903.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5302.00. A kilo of silver was priced at Rs. 69500.00 and a gram was worth Rs. 69.50.
திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் நிலத்தில் உள்ள பாறையில் கல்வெட்டு இருப்பதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் கண்டறிந்தனர். திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வு பணிகளின் போது தானிப்பாடி அடுத்த சி ஆண்டாப்பட்டு கிராமத்தில் உயரமான பாறையில் சுமார் 10 அடி நீளத்தில் கல்வெட்டு இருப்பது தெரியவந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும் இது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என்று அறியவந்தது. இக்கல்வெட்டைப் படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் அவர்கள், திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான ஸ்ரீவல்லப பாண்டியணின் ஆட்சிக்காலத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பழந்தேவதானமான ஆண்டார்பட்டு நிலம் நெடு நாட்களாக, புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப்பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு பெருமாளும் மல்லப்பதென்னாயக்கரும் கோயில் தானத்தாரும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கல்வெட்டில் தற்போது ஆண்டாப்பட்டு என்று வழங்கப்படும் ஊரின் பெயர் ஆண்டார்பட்டு என்று அறியப்படுகிறது. இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன் சந்திரன் இதனுடன் திருவண்ணாமலை மலையைக்குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவையும் வெட்டப்பட்டுள்ளது. இது போன்ற மலையைக் குறிக்கும் முக்கோண குறியீடு கொண்ட கல்வெட்டுகள் திருவண்ணாமலையைச் சுற்றி சுமார் 60 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணக்கிடைக்கின்றன. இந்த செய்தி மூலம் திருவண்ணாமலை கோயில் வழிபாட்டிற்கும் வளர்ச்சிக்கும் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது என்பது அறியப்படுகிறது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பிரதோஷம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் முன்னிட்டு நேற்று (28.04.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Gold Rate Increased Today Morning (29.04.2022)!
The cost of gold has increased to Rs. 272 per sovereign on Friday Morning (April 29, 2022). The cost of the gold rate has increased to Rs. 34 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 39072.00 and a gram was Rs. 4884.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5283.00. A kilo of silver was priced at Rs. 68800.00 and a gram was worth Rs. 68.80.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உச்சி கால சங்காபிஷேகம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (28.4.2022) வியாழன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உச்சி கால சங்காபிஷேகம் நடைபெறும். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
வாரந்தோறும் பரிசு மழை : Silver coin பரிசாக பெற்றவர்கள் விவரம்!
POLURONLINE.COM இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வார பரிசு போட்டியில் வெள்ளி நாணயங்கள் (Silver Coin) பரிசாக வென்ற பார்வையாளர்கள்… 1. திரு. சுரேந்தர் – போளுர் 2. திரு. பாபு நிஷாந்தி – போளுர் 3. திரு. ஜெகநாதன் -போளுர் வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது POLURONLINE.COM வாட்ஸ்அப் குழுவில் இணையலாம். https://chat.whatsapp.com/FTjxcB8mJ6hImN7d4Ek5aC
Gold Rate Decreased Today Morning (28.04.2022)!
The cost of gold has decreased by Rs. 200 per sovereign on Thursday Morning (April 28, 2022). The cost of the gold rate has decreased by Rs. 25 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38696.00 and a gram is Rs. 4837.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5236.00. A kilo of silver is priced at Rs. 68800.00 and a gram is worth Rs. 68.80.
10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!
பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம் (PM – KISSAN Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000/- நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும். இதன் 11-வது தவணை இந்த மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை பெற ஒவ்வொரு PM – KISSAN பயனாளிகளும் https://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் E – KYC செயல்முறையை அப்டேட் செய்திருக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி 31.03.2022 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான காலக்கெடு 22.05.2022-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கம் ஏரி மீன் மகசூல் பொது ஏலம்!
கலசபாக்கம் ஏரி மீன் மகசூல் நாளை 28-04-2022 பொது ஏலம் போளூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விடப்படுகிறது. திரு.ஜீவானந்தம், கிராம நிர்வாக அலுவலர் தகவல்.
ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல் விவரங்களை அளித்திட வேண்டும். விண்ணப்பம் அளித்த விவரங்களின் நில வகையினை கொண்டு வண்டல் மண் எடுக்க முன்னுரிமை வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!
உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் சார்பாக நடைபெறும் ஊர்தோறும் உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!! இதில் பல்வேறு மரபு உணவு வகைகள், மரபு அரிசி ரகங்கள், பிற தானியங்கள், அவற்றின் விதைகள் விற்பனை மற்றும் கண்காட்சி, கால்நடைகள் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, உழவு மற்றும் பாரம்பரிய கருவிகளின் கண்காட்சி இவற்றோடு விவசாயிகளுடனும் கலந்துரையாடலாம். இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம். நாள்: 03.05.2022, செவ்வாய்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.11:41 AM
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவுரை!
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ . 500 அபராதம் விதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும். வணிக நிறுவனங்களிலும் முகக்கவசம் அணிந்து கடைக்கு வர வேண்டும் என வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும். ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
Gold Rate Decreased Today Morning (27.04.2022)!
The cost of gold has decreased by Rs. 64 per sovereign on Wednesday Morning (April 27, 2022). The cost of the gold rate has decreased by Rs. 8 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 39032.00 and a gram is Rs. 4879.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5278.00. A kilo of silver is priced at Rs. 70000.00 and a gram is worth Rs. 70.00.
Gold Rate Decreased Today Morning (26.04.2022)!
The cost of gold has decreased by Rs. 248 per sovereign on Tuesday Morning (April 26, 2022). The cost of the gold rate has decreased by Rs. 31 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 39048.00 and a gram is Rs. 4881.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5280.00. A kilo of silver is priced at Rs. 70500.00 and a gram is worth Rs. 70.50.
சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!
கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு நாய்கள் மற்றும் சமூக விரோதிகளால் அவைகளை வேட்டையாடப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் ஆங்காங்கே பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் முதற்கட்டமாக 15 சிறு தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்நிகழ்வில் கலசபாக்கம் நீதிமன்ற நீதிபதி மற்றும் புதுப்பாளையம் வன சரகர் திரு.சுரேஷ் , சமூக ஆர்வளர்கள் திரு.Lic தெய்வசிகாமணி, வக்கீல் திரு.தனஞ்செயன், NGC திரு.பத்மநாபன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பன்னீர்செல்வம் மற்றும் பருவதமலை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பருவதமலையை பாதுகாக்க மலையை சுற்றியுள்ள கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைந்து இந்த சமூக விரோதிகளை கண்டறிந்து, வனத்தில் தீ வைப்பது வன விலங்குகள் வேட்டையாடுவது, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, கஞ்சா எடுத்து செல்லுதல் போன்ற செயல்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும் இந்த மலை இந்த பகுதி மக்களுடையது நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Gold Rate Decreased Today Morning (25.04.2022)!
The cost of gold has decreased by Rs. 136 per sovereign on Monday Morning (April 25, 2022). The cost of the gold rate has decreased by Rs. 17 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 39424.00 and a gram is Rs. 4928.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5327.00. A kilo of silver is priced at Rs. 70800.00 and a gram is worth Rs. 70.80.