இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதார் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்பேசி எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். சேவைகளைப் பெற கொண்டுவர வேண்டியவை ! வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் அசல்.
வாக்காளர்களே ! உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா!
வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. e-EPIC எனப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிவை வாக்காளர்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். e-EPIC என்பது EPIC இன் பி.டி.எஃப் பதிப்பாகும். வாக்காளர்கள் தங்கள் கார்டுகளை மொபைல் போன்களில் சேமித்து வைக்கலாம், டிஜி லாக்கர்களில் பதிவேற்றலாம் அல்லது அச்சிட்டு லேமினேட் செய்து வைத்துக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு !
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்காணிப்பது தொடர்பாக, பல்வேறு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள வருவாய் துறை வெளியிட்ட அரசாணை விவரம் அரசு நிலங்களில் குறிப்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், நிலங்களை பாதுகாப்பது தொடர்பாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி தாலுகா, மண்டல, மாவட்ட, மாநில அளவில் அவ்வப்போது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1997-98 ஆண்டில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. பிறகு,2002-ல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுஅமைக்கப்பட்டது. தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 3 வகையான குறைதீர்த்தல் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு 2016-ல் பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019-ல், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு வெளியிட்ட உத்தரவின்படி, உள்ளூர் அளவில், உதவிபொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என குளம் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் இதரஅரசு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் ஒருமுனை கண்காணிப்பு திட்டம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே உள்ள குழுக்கள் ரத்து செய்யப்பட்டு, 3 வகையான புதிய குழுக்கள்கோட்டம், மாவட்ட, மாநில அளவில்அமைக்கப்படுகிறது. கோட்ட அளவிலான குழு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்படுகிறது. இக்குழுவில், அந்த பகுதியின் காவல் துணைகண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், நீர்வளத் துறையின்உட்கோட்ட அதிகாரி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், ஊரக வளர்ச்சி மண்டல அதிகாரி, நில அளவை கோட்ட கண்காணிப்பாளர், தலைவரால் பரிந்துரைக்கப்படும் இதர அலுவலர்கள் இருப்பார்கள். கோட்ட அளவிலான குழுவானது, தாலுகா அளவில் ஆட்சேபகரமான, ஆட்சேபம் இல்லாத பகுதிகளில் உள்ளஆக்கிரமிப்புகளை கண்காணித்தல், அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள், இடங்களை கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். இக்குழு மாதம் ஒருமுறை கூடி முடிவுகளை எடுக்கும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுசெயல்படும். இக்குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சியாக இருந்தால் காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், நீர்வளத் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர், நகர ஊரமைப்புத் துறை உதவி இயக்குநர், நில அளவை உதவி இயக்குநர், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழு மாவட்ட அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான குழு செயல்படும். இக்குழுவில், வருவாய், நகராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, உள்துறை, வீட்டுவசதித் துறை செயலர்கள், டிஜிபி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர், நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர், நில அளவை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் இருப்பார். இந்த குழுவானது ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.60 லட்சம் உண்டியல் காணிக்கை!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், ரூ.60 லட்சத்து 9 ஆயிரத்து 536-ம், 236 கிராம் தங்கமும், 551 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.
MBBS கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் பிப். 17ம் தேதி முதல் பிப். 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும் – மருத்துவ கல்வி இயக்ககம்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கல்லூரிகள் தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவை தொடர்ந்து கல்லூரிகள் குறித்த விபரங்கள் வரும் 15ம் தேதி https://tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். வரும் 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்று 17ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 3 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தை கிருத்திகை !
புதன் (09.02.2022) இரவு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் நான்காம் பிரகாரம் கிருத்திகை மண்டபம் எழுந்தருளல். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந்தேதி திறப்பு!
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந்தேதி இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திரகோவில் தை மாத திருகார்த்திகை விழா!
நமது கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திர கோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பக்தர்கள் மொட்டை அடித்தல், காது குத்துதல்,காவடி எடுத்தல் என தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வழிபாடு செய்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டியது அவசியம் – பதிவுத்துறை உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த விதமான பதிவும் மேற்கொள்ளக்கூடாது என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று அல்லது உறுதிமொழி பெற வேண்டியது அவசியம். எனவே நிலத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு முன்பு மக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்!
திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் தேர்தல் பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள், • திருவண்ணாமலைதிட்ட இயக்குனர் மகளிர் திட்டம் 9444094360 • வந்தவாசி கூட்டுறவு இணைப் பதிவாளர் 7338749500 • ஆரணி வேளாண் இணை இயக்குனர் 9092843131 • செய்யாறு உதவி இயக்குனர் ஊராட்சிகள் 7402903703 • செங்கம் ஆர்டிஓ திருவண்ணாமலை 9445000420 • சேத்துப்பட்டு ஆர்டிஓ செய்யாறு 9445000419 • கண்ணமங்கலம் கூட்டுறவு துணை பதிவாளர் 7388749504 • கீழ்பெண்ணாத்தூர் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை 9364220624 • போளூர் ஆர்டிஓ ஆரணி 9976177956 • வேட்டவலம் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் 7358296365 [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மொத்த வாக்காளர்கள் விவரம்!
போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை : 1214 வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை – 347 ஆரணி நகராட்சி மொத்த வார்டுகள் எண்ணிக்கை : 33 மொத்த 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 130 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நகராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 39 மொத்த 314 வேட்பு மனுக்களில் 43 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவத்திபுரம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 27 மொத்த 159 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வந்தவாசி நகராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 24 மொத்த 147 வேட்பு மனுக்களில் 30 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 117 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். செங்கம் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 18 மொத்த 110 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 87 பேர் போட்டியிடுகின்றனர். சேத்துப்பட்டு பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 18 மொத்த 95 வேட்பு மனுக்களில் 25 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 70 பேர் போட்டியிடுகின்றனர். தேசூர் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 12 மொத்த 57 வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். களம்பூர் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 15 மொத்த 67 வேட்பு மனுக்களில் 12 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 55 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கண்ணமங்கலம் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 15 மொத்த 71 வேட்பு மனுக்களில் 29 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 15 மொத்த 80 வேட்பு மனுக்களில் 16 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 64 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெரணமல்லூர் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 12 மொத்த 48 வேட்பு மனுக்களில் 4 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போளூர் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 18 மொத்த 87 வேட்பு மனுக்களில் 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 87 வேட்பு மனுக்களில் 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 55 பேர் போட்டியிடுகின்றனர். புதுப்பாளையம் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 12 மொத்த 75 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்டவலம் பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 15 மொத்த 57 வேட்பு மனுக்களில் 6 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கப்பட்டு இருந்த 1562 வேட்பு மனுக்களில் 347 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி 1214 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட களம் கண்டு உள்ளனர்.
அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி : செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!
அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை ஒட்டி, செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்!
இந்த ஆண்டு தை ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் வெகுவிமரிசையாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் இன்று (06.02.2022) கும்பாபிஷேகம் நடைபெற்றது!
போளூர் அடுத்து படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் இன்று (06.02.2022) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்.
நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் !
தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் செயல்படுகிறது.
படவேடு கும்பாபிஷேக விழா குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் பா. முருகேஷ் ஆய்வு !
போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருகோவில் படைவீடு கும்பாபிஷேக விழா வருகின்ற 06.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !
போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத, ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலை இராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம் 24ஆம் நாள் (06.02.2022) அன்று நடைபெற உள்ளது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் அதிகாலையில் நிலங்களை தயார் படுத்தும் காட்சி !
ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் அதிகாலையில் நிலங்களை தயார் படுத்தும் காட்சி. இடம் : போளூர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]