நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது! – தமிழ்நாடு அரசு
பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை!
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது!
மைக்ரோசாப்ட் & அல்ஃபாபெட் மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண் பற்றிய விவரம்!
#GoCall | வாக்காளர் பதிவு நடைமுறை குறித்த விவரங்கள் தேவையானால் ? உங்கள் மாவட்ட STD Code – வுடன் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணை பயன்படுத்தி விவரங்களை பெறலாம்.
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது!
3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை – நேற்றைய எண்ணிக்கையை விட 50,190 வரை குறைந்திருக்கிறது. – மத்திய சுகாதாரத்துறை
தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு !
15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25.75 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது முன்களப்பணியாளர்களுக்கு 13.01 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மருத்துவப் பணியாளர்களுக்கு 9.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை
போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை!
அரசு பணிகளில் பணியாற்ற விரும்புவோருக்கு என போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள், இந்திய பொறியியல் பணி தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள் , வங்கித் தேர்வுகள் ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பாடல்கள் ஒளிபரப்பப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்: 1-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முன்னாள் படை வீரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 1.3.2022-க்குள் புதுப்பித்துக்கொள்ளலாம். முன்னாள் படைவீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம், இந்தச் சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை !
தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் மற்றும் ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. காலியிடங்கள் : 39 கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-2-2022 ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண http://www.mrb.tn.gov.in/pdf/2022/vhn_dap_200122.pdf
குட் நியூஸ். “கரோனா தொற்று வேகம் சற்று குறைகிறது “இந்தியாவின் ரிப்போர்ட் .!!
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது.
கலசபாக்கம் வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரானா தொற்று!
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் நேற்று தெரியவந்தது. அதில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டிக்க திட்டம்!
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் https://tnmedicalselection.net https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று மாலை வெளியீடு.
திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் !
திருவண்ணாமலை நகரில் மத்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை (23.01.2022 ) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை – மத்திய அரசு!
ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6-11 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாக மாஸ்க் அணியலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த முடிவு – அமைச்சர் பொன்முடி!
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 01-ம் தேதி தொடங்கும் எனவும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது எனவும் தகவல்.
அமேசான் நிறுவனத்தின் கல்வி உதவி தொகை!
அமேசான் நிறுவனம், முதலாம் ஆண்டு CSE/IT படிக்கும் இந்திய குடிமகன்களுக்கு ₹1,60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை. விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி https://ffe.org/amazon-future-engineer/
மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு!
டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது. இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 17ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது