மின் தடை குறித்த புகார்களை 94987 94987 தொலைபேசி எண்ணில் “24X7” மணி நேரமும் மற்றும் அவசர கால உதவி எண்கள் 04175-232363,9499970214 தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும் என திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது மிக்ஜாம் புயல்!
சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது ‘மிக்ஜாம்’ புயல். மணிக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல், நெல்லூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Gold Rate Decreased Today Morning (05.11.2023)
The cost of gold has decreased by Rs. 1000 per sovereign on Tuesday Morning (December 05, 2023). The cost of the gold rate has decreased by Rs. 125 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 46800.00 and a gram is Rs. 5850.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 6320.00. A kilo of silver is priced at Rs. 81400.00 and a gram is worth Rs. 81.40.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக மாற்றுதிறனாளிகள் தினவிழா!
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (04.12.2023) வேற்றுமையை ஒழிப்போம் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பதிவு – வெதர்மேன் தகவல்!
2015 – ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் அதிக மழை பொழிகிறது எனவும் 2015 – ஆம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் திரு பிரதீப் ஜான் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 16.40 கன அடி!
போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையில் கனமழை காரணத்தினால் ஏரி, குளம் மற்றும் ஆறுகள் போன்ற இடங்களில் நீர் நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றி வருகின்றது. காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது. செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 16.40 கன அடி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்!
இன்று (04.12.2023) திருவண்ணாமலை மாவட்டம் போளுர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S. முத்துசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. S. கோவிந்தசாமி அவர்கள் இருந்தார்.
நாளை 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு…
‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!
‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் கனமழை தொடர் வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக 4 தாலுக்காவை சார்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுக்காவை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் விடுமுறை அறிவிப்பு.
Gold Rate Increased Today Morning (04.12.2023)
The cost of gold has increased to Rs. 480 per sovereign on Monday Morning (December 04, 2023). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 47800.00 and a gram was Rs. 5975.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 6445.00. A kilo of silver is priced at Rs. 83500.00 and a gram is worth Rs. 83.50.
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!
சபரிமலையில் நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைப்பு: பண்டிகை காலத்தையொட்டி தள்ளுபடி!
பண்டிகை காலங்களை முன்னிட்டு, அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் மழைக்காலத்தையொட்டி 2,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்!
தமிழகம் முழுவதும் இன்று 2 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும், 100 இடங்களில் மருத்துவ காப்பீடு முகாம்களும் நடைபெறுகின்றன.
இன்று முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றம்!
சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இனி புதிய சிம் வாங்க திட்டமிட்டால் அல்லது சிம் கார்டு விற்பனையாளராக இருந்தால் இந்த புதிய விதிகள் பின்பற்றுவது முக்கியம். குடிமக்கள் பாதுகாப்பு கருதி இவ்விதிமுறைகளில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர், சேர்த்தல்,நீக்கம்,திருத்தம் சிறப்பு முகாம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 – இல் நடக்கவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்க NPCI அறிவுறுத்தல்!
Google Pay, PhonePe, Paytm போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர், ரூ.26.50 உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.