திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (21.06.2026) ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதையொட்டி, அருள்மிகு நடராஜர் மற்றும் அருள்மிகு சிவகாம சுந்தரி அம்பாள் திருவீதியுலா எழுந்தருளி, திருக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

