The power supply will be suspended in the following areas on Polur (16.06.2022) from 09:00 am to 05:00 pm for maintenance work. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வியாழன் கிழமை (16.06.2022) போளூர் துணை மின்நிலையம் சேர்ந்த போளூர் டவுன், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடதாரிகுப்பம், பெலாசூர், வாட்டர்ஒர்க்ஸ், குன்னத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
முதல் தனியார் ரயில் சேவை இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்!
இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை இன்று மாலை 06:00 மணிக்கு தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படும் சேவை ஆகும். கோவையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக, ஷீரடியை சென்றடையும். டிக்கெட்டுக்கள் கிடைக்கும் இடம் : கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் அனைத்து சாய்பாபா கோவில்களிலும் கிடைக்கும்.
தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் பற்றிய விவரம்!
இசைக்கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் பொருட்டும், இளைய சமுதாயத்தினரிடையே இசைக்கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், மாணவர்களை புகழ்மிக்க இசைக்கலைஞர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் மாவட்ட இசைப்பள்ளிகள் இயக்கி வருகின்றன. மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகள் இசைப்பள்ளி அளவில் நடத்தப்படும். மூன்றாம் ஆண்டில் அரசு தேர்வுத்துறையால் முதன்மைப் பாடம், துணைப்பாடம், வாய்மொழித்தேர்வு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது 17 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. 3 ஆண்டுகள் Certification Course : 1. குரலிசை 2. நாதசுரம் 3. தவில் 4. தேவாரம் 5. பரதநாட்டியம் 6. வயலின் 7. மிருதங்கம் முகவரி : திருவண்ணாமலை சமுத்திரம் கிராமம், கிரிவலப் பாதை, செங்கம் ரோடு, ரமனாஸ்ரமம் அஞ்சல், திருவண்ணாமலை – 606 603. தொலைபேசி எண் : 235545 கல்வித்தகுதி : 7 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு : 13 வயது முதல் 25 வயது வரை கட்டணம் : படிப்புக் கட்டணம் இல்லை , சிறப்புக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ. 120 செலுத்தவேண்டும். முதல் ஆண்டில் சேர்க்கை கட்டணமாக ரூ. 2 மற்றும் பிணைத் தொகை ரூ. 30 செலுத்த வேண்டும். பள்ளி வேலை நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை – காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ( மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை). மேலும் விவரங்களை https://artandculture.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறப்பு!
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறப்பு. ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் இன்று மாலை முதலே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Gold Rate Decreased Today Morning (14.06.2022)!
The cost of gold has decreased by Rs. 760 per sovereign on Tuesday Morning (June 14, 2022). The cost of the gold rate has decreased by Rs. 95 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 37920.00 and a gram is Rs. 4740.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5139.00. A kilo of silver is priced at Rs. 66000.00 and a gram is worth Rs. 66.00.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (12.06.2022) வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறப்பு!
கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (13. 06.2022) முதல் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI தேர்வுக்கான Hall Ticket வெளியிட்டது!
தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI வேலைக்கான அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Gold Rate Increased Today Morning (11.06.2022)!
The cost of gold has increased to Rs. 480 per sovereign on Saturday Morning (June 11, 2022). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38680.00 and a gram was Rs. 4835.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5234.00. A kilo of silver was priced at Rs. 67500.00 and a gram was worth Rs. 67.50.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக திரு.கார்த்திகேயன் பொறுப்பேற்றுக்கொண்டார்!
இன்று (10.06.2022) திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக Dr.K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இவர் மருத்துவ துறையில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பற்றிய விவரம்!
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு (100 நாள்வேலை) மூலம் பயன்பெறும் மக்கள் தங்களுடைய 100 நாள் அட்டையின் முழு விவரங்களை https://nrega.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் தாங்களே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஊரில் எத்தனை குடும்பங்கள் உள்ளது, எத்தனை 100 நாள் அட்டை பதிவாகி உள்ளது, நீங்கள் எத்தனை நாள் வேலை செய்துருக்கிறீர்கள், எந்த இடத்தில் வேலை செய்துருக்கிறீர்கள், எந்தந்த மாதம் எவ்வளவு ருபாய் வாங்கிருக்கிறீர்கள், உங்களுடைய 100 நாள் அட்டைக்கான வங்கி கணக்கு இது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
ஜூன் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!
ஜூன் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி பணியாளர் தேர்வாணயத்தில் 8,106 காலிப்பணியிடங்கள்!
வங்கி பணியாளர் தேர்வாணயத்தில்(Institute of Banking Personnel Selection-IBPS) 8,106 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: CA, B.Sc., MBA வயது வரம்பு (01-06-2022 தேதியின்படி): 18 முதல் 40 ஆண்டுகள் விண்ணப்பக் கட்டணம்: பொது: ரூ. 850/- SC/ST/PWD/ Ex Serviceman : ரூ. 175/- பணம் செலுத்தும் முறை : ஆன்லைன் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 27-06-2022
Gold Rate Decreased Today Morning (10.06.2022)!
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Friday Morning (June 10, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38200.00 and a gram is Rs. 4775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5174.00. A kilo of silver is priced at Rs. 67000.00 and a gram is worth Rs. 67.00.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடர்ந்து LKG, UKG வகுப்புகள் செயல்படும் என தகவல்!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடர்ந்து LKG, UKG வகுப்புகள் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாரத்நெட் 2-ஆம் கட்ட திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ. 1, 627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.
கல்வி, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான கடனுதவி பெற புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
இனி கல்வி, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் கடனுதவி பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.jansamarth.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம்!
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை அனைத்து அங்கங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். செல்வ மகள் திட்டம் என்பது இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் ஜனவரி 22ம் தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை துவங்க இயலும் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர்களால் கணக்கை துவங்க இயலும். இந்த திட்டத்தின்படி 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குறைந்த பட்சமான தொகையாக ரூ.250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கை தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250 கணக்கில் செலுத்தப்பட வேண்டும் மொத்தமா 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்தலாம். 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50000 ரூபாய் வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கு உள்ளவர்கள் எல்லா மாதம் 10ஆம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும் எனினும் அதிகப்படியான தொகையை செலுத்தும் போது அந்த தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம். செல்வ மகள் ஸ்கீம் இன் இடை நிறுத்தப்பட்டு இருக்கும்போது ரூ.50 அபராதம் செலுத்திவிட்டு விடுபட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம்.
Gold Rate Increased Today Morning (09.06.2022)!
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Thursday Morning (June 09, 2022). The cost of the gold rate has increased to Rs. 25 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38360.00 and a gram was Rs. 4795.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5194.00. A kilo of silver was priced at Rs. 68000.00 and a gram was worth Rs. 68.00.
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி!
தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.