போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் மொடையூர் உள்வட்டம் பகுதிகளான விளாப்பாக்கம், தோத்துக்கன்னி, அல்லியாளமங்கலம், மட்டப்பிறையூர், ஓட்டேரி, இருவத்தேனி, மொடையூர், மாணிக்கவல்லி, ஒடநகரம், அரும்பலூர், ராந்தம், செம்மியமங்கலம் மற்றும் பெலாசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (08.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
2022-23 ஆண்டின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்!
பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பம் செய்யவும் பள்ளிகல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. • ஜூலை 20 முதல் 31-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். • ஆக.8-ம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும். • ஆக.14-ல் கவுன்சிலிங் துவங்கும். • ஆக.16-ல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங். • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆக.22-லும் கவுன்சிலிங் துவங்கும். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304
அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம்!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 815 பேருந்துகளில் விளம்பரம் செய்ய கோரப்பட்டுள்ள ரூ.88 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம்; வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும்!
தமிழகத்தில் மொத்தம் 1.75 லட்சம் பணியிடங்கள் உள்ளதாக கணக்கீடு. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு!
• 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு! • 10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிவடையும் எனவும் அறிவிப்பு! • 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி!
ஒலிம்பியாட் தொடரை ஒட்டி ஜூன் 10 முதல் 20 வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டி நடைபெறுகிறது. அகில இந்திய கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 வது உலக தமிழ் மாநாடு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என அறிவிப்பு!
11 – வது உலக தமிழ் மாநாடு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறப்பு!
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை – 09.06.2022) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். https://sabarimalaonline.org/#/register என்ற இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
Gold Rate Increased Today Morning (08.06.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Wednesday Morning (June 08, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38160.00 and a gram was Rs. 4770.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5169.00. A kilo of silver was priced at Rs. 68000.00 and a gram was worth Rs. 68.00.
மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம்!
2021-22 ஆம் ஆண்டிற்கான State Food Safety Index தர மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம். உணவு பாதுகாப்பு துறை செயல்பாடு பற்றி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சந்தவாசல் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது!
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் சந்தவாசல் உள்வட்டம் பகுதிகளான சந்தவாசல், துளுவபுஷ்பகிரி, புஷ்பகிரி, குப்பம், கல்குப்பம், அனந்தபுரம், சேதாரம்பட்டு, பார்வதி அகரம், அலியாபாத், படவேடு, வாழியூர், காளசமுத்திரம், இலுப்பகுணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், வெள்ளூர், கல்பட்டு, இரும்பிலி ஆகிய பகுதிகளுக்கு இன்று (07.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
போளூர் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் மழை!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் நேற்று (06.06.2022) இரவு இடி மின்னலுடன் பெய்த மழையின் அளவு 21.6 மில்லி மீட்டராக பதிவு ! [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு!
பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய ஜூலை 31 – ஆம் தேதி வரை தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
Gold Rate Decreased Today Morning (07.06.2022)!
The cost of gold has decreased by Rs. 200 per sovereign on Tuesday Morning (June 07, 2022). The cost of the gold rate has decreased by Rs. 25 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38080.00 and a gram is Rs. 4760.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5159.00. A kilo of silver is priced at Rs. 67700.00 and a gram is worth Rs. 67.70.
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கேளூர் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது!
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் கேளூர் உள்வட்டம் பகுதிகளான கேளூர், சித்தேரி, தேப்பனந்தல், செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, குன்னத்தூர், துரிஞ்சிகுப்பம், விளாங்குப்பம், கல்வாசல், முனிவந்தாங்கல், முக்குறும்பை, ஏந்துவாம்பாடி, கஸ்தம்பாடி, பால் வார்த்து வென்றான் ஆகிய பகுதிகளுக்கு இன்று (06.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
போளூர் பகுதியில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது!
போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனந்தபுரம், படவேடு, சந்தவாசல், பால் வார்த்து வென்றான், கல்பட்டு, அத்திமூர் திண்டிவனம், கட்டி பூண்டி ஆகிய 7 ஊராட்சிகளில் நாளை ஜூன் 7 – ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
9-ம் வகுப்பு ஆல் பாஸ் என தகவல்!
பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
Gold Rate Increased Today Morning (06.06.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Monday Morning (June 06, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38280.00 and a gram was Rs. 4785.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5184.00. A kilo of silver was priced at Rs. 68500.00 and a gram was worth Rs. 68.50.
ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்!
டெட் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிப்பில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும்.
Gold Rate Decreased Today Morning (04.06.2022)!
The cost of gold has decreased by Rs. 280 per sovereign on Saturday Morning (June 04, 2022). The cost of the gold rate has decreased by Rs. 35 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38200.00 and a gram is Rs. 4775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5174.00. A kilo of silver is priced at Rs. 67500.00 and a gram is worth Rs. 67.50.