அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு கமண்டல நாக நதியில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி. அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு பொதுமக்கள் உற்சாகமாக மலர்தூவி வரவேற்றனர்!
‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி நமது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தது, அதை பொதுமக்கள் மேள தாளம் முழங்க, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
நகைக்கடன் தள்ளுபடி 25ம் தேதி முதல் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்!
5 சவரன் வரையிலான நகைகளுக்கு கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின்னர், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், இம்மாதம் 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்டிருக்கும் நகைகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் , 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, 40 கி.மீ வேகத்துக்கு மேல் அந்த வாகனத்தை இயக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிப்.,19-ல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!
வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
திருவண்ணாமலையில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 15.02.2022 இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில். மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
ஷிரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலா – பொதுமக்களுக்கு IRCTC யின் ஏற்பாடு!
இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை 82879 31974, 90031 40682, 90031 40714 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெற முடியும்.
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்!
திருவண்ணாமலை அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளையும், நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளதையும் பார்வையிட்டு கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
TNPSC சார்நிலை பணிகள் தேர்வு தரவரிசை முக்கிய அறிவிப்பு!
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 545 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வை 15,490 பேர் எழுதிய நிலையில், 15,012 பேருக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதனை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை ஆகிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்!
கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.
45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம்!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளதாக பபாசி செயலாளர் கூறினார். அதே போல், கடந்த ஆண்டு போலவே கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் – மத்திய அரசு அறிவிப்பு!
விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன முக்கியமான நிபந்தனை: • கடந்த 7 ஆண்டுகளில் இதேபோல் டிராக்டர் எதையும் விவசாயிகள் வாங்கி இருக்க கூடாது. • விண்ணப்பிப்பதற்கு 18 வயது முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். • விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 1.50 லட்சம் இல்லை அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். • ட்ராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். • ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே டிராக்டருக்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்க முடியும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு!
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களின் விவரம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் திருவண்ணாமலை – அரசு கலைக்கல்லூரி, செங்கம் ரோடு, திருவண்ணாமலை ஆரணி – மார்க்கெட்டிங் கமிட்டி , ஆரணி திருவதிபுரம் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , செய்யாறு வந்தவாசி – ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கல்லூரி , வந்தவாசி பேரூராட்சிகள்: செங்கம், புதுப்பாளையம் – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கம் பேரணாம்பட்டு, சேத்துப்பட்டு,தேசூர் – டோமினிக் சேவியர் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு களம்பூர், கண்ணமங்கலம், போளூர் – ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்லூரி போளூர் தாலுகா கீழ்பெண்ணாத்தூர் , வேட்டவலம் – டேனிஷ் மிஷின் டவுன் ஆரம்பப்பள்ளி திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம். கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை!
தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும். – தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்.
பௌர்ணமி கிரிவலத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்!
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான (15.02.2022) இரவு 10.30 முதல் (16.02.2022) இரவு 11.30 வரை கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது , கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம்!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்கள், தங்களது பதிவுகளை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி தெரிவித்துள்ளார். வரும் 1ம் தேதிக்குள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம் மூலமாக தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம். இணையதளம் மூலம் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ, பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். 2014ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில், மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் இயந்திரங்களில் க்யூஆர் கோடு – இனி எளிய முறையில் கட்டணம் செலுத்தலாம்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் புதிய தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதியினால் இனி டிக்கெட் எடுக்க கவுன்டரில் நீண்ட நேரம் வரிசையில் பயணிகள் காத்திருக்கத் தேவையில்லை என தெற்கு ரயில்வே கூறியுள்ளது மேலும் ரயில்வே பயணிகள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை விரிவுப்படுத்தி உள்ளதாகவும் அதன்மூலம் , க்யூ.ஆர். கோடு மூலம் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்) டிக்கெட், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெறலாம். சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்களைபெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர். முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டார்ட் கார்டு, பிஎச்எம் யுபிஐ க்யூ.ஆர். கோடு, பேடிஎம், பிஎச்எம் யுபிஐ கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தலாம் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.